Followers

Saturday 6 February 2016

இந்து தர்மத்தை அறிவோம் (தமிழ் நூல்கள்)



இந்து தர்மத்தை அறிவோம்


4.3) தமிழ் நூல்கள்


தமிழ் இலக்கியங்களும் தர்மத்தை உயர்வாகப் போற்றுகின்றன. அறம் எனும் சொல் தர்மத்தைக் குறிக்கும். தமிழ் இலக்கியங்களுள் மிகப் பழைமையானது அகத்தியம். இதை இயற்றியர் அகத்திய மாமுனிவர். பின்னர், தொல்காப்பியம் எனும் நூலை அகத்தியரின் பன்னிரு மாணவர்களுள் ஒருவரான தொல்காப்பியர் இயற்றினார். அகத்தியத்தின் சில வரிகளும் குறிப்புகளும் மற்றமற்ற தமிழ்நூல்களில் காணப்பட்டாலும், தற்போது அகத்தியம் எனும் நூல் இல்லை. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைக்கின்றது. இதுதான் இன்னமும் கிடைக்கப்பெறும் தமிழ் இலக்கியங்களிலே மிகவும் பழைமையானது.


தொல்காப்பிய நூல் மூன்று அதிகாரங்களை உடையது. அவை: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் மற்றும் பொருளதிகாரம். ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது தலைப்புகளை உடையது. எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ் இலக்கணத்தை போதிக்கின்றன. பொருளதிகாரம் நிலத்திணைகள், பருவநிலைகள், அக்கால மனிதர்கள் போன்ற பல கருத்துகளை விவரிக்கின்றது. முல்லை நிலத்து தெய்வமாக திருமாலும், குறிஞ்சி நிலத்து தெய்வமாக முருகனும், மருதநிலத்து தெய்வமாக இந்திரனும், பாலை நிலத்து தெய்வமாக காளியும், நெய்தல் நிலத்து தெய்வமாக வருணனும் குறிப்பிடப்படுகின்றனர். இவ்வாறு நாட்டியசாஸ்திரம், வர்ணாஷ்ரம தர்மம் போன்ற குறிப்புகளும் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன.


அடுத்தப்படியாக, எட்டுத்தொகை நூல்களான ஐங்குறுனூறு, புறநானூறு, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, கலித்தொகை, நற்றினை மற்றும் பதிற்றுப்பத்து ஆகியவை அமைந்துள்ளன. பத்துப்பாட்டு எனப்படும் திருமுறுகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பொருணராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை அமைந்துள்ளன. ஐங்குறுநானூற்றின் முதல் பாடலை இயற்றியவர் பெருந்தேவனார். இவர் தான் வியாசர் மகாபாரதத்தை தமிழில் அருளியவர். இந்த நூல்களில் எல்லாம் இந்துதர்மத்தைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை நாம் காணலாம். பதினெண்மேல்கணக்கு என்று அறியப்படும் இந்த பதினெட்டு நூல்களும் மிகவும் பழைமையான நூல்கள். இவற்றில் அடங்கியிருக்கும் 2279 பாடல்களை 473 வெவ்வேறு புலவர்கள் இயற்றியுள்ளனர். மேலும், 102 பாடல்களை இயற்றியவர்கள் யாரென்று தெரியவில்லை.


அடுத்தப்படியாக, பதினெண்கீழ்கணக்கு நூல்கள் அமைந்துள்ளன. அவை: திருக்குறள், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, நான்மணிக்கடிகை, களவழி நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமலை நூற்று ஐம்பது, திரிகடுகம், பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, கைநிலை ஆகிய பதினெட்டு நூல்கள். இந்த நூல்கள் நன்னெறி மற்றும் நல்வாழ்வு ஆகிய இரண்டையும் புகட்டுகின்றன. அதன்பிறகு ஐம்பெரும் காவியங்கள் தோன்றின.

பக்தி நூல்கள் - சைவம் மற்றும் வைணவம் எனும் இருபெரும் பக்தி மார்கங்களைச் சேர்ந்த நூல்களும் பக்திசுவை மணக்க தர்மத்தைப் போதிக்கின்றன. தமிழ் மண்ணில் தோன்றிய பக்திமார்கம் தான் பின்னர் பாரத தேசமெங்கும் பரவியது. பன்னிரு ஆழ்வார்களும் சைவ அடியார்களும் திவ்ய பிரபந்தம் மற்றும் திருமுறை நூல்களை அருளினர். மேலும் கம்பராமாயணமும் பெரியபுராணமும் கம்பர் மற்றும் சேக்கிழார் ஆகியவர்களால் அருளப்பட்டது. திருமுறை சைவர்கள் இடையேயும் திவிய பிரபந்தம் வைணவர்கள் இடையேயும் மிகவும் புகழ்ப்பெற்றவை.


தமிழ் நூல்களில் மிகவும் முக்கியமானவையாகவும் எங்கும் கிடைப்பதாகவும் சில நூல்கள் அமைந்துள்ளன. அவை: திருக்குறள், திருமுறை, திவிய பிரபந்தம் ஆகும். திருக்குறள் ஒரு தர்மநூல் என்பதால் ஆங்கில இந்துக்களிடமும் இது பிரபலமடைந்து வருகின்றது. தர்மத்தை இரண்டடியில் இனிமையாக விளக்கும் இயல்புடைய திருக்குறளை இந்துக்கள் அவசியமாக கடைப்பிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment