Followers

Monday 8 February 2016

மலேசியாவின் பழைய இந்துகோவில்



மலேசியாவில் ஏராளமான இந்துகோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் மிகவும் பழைமையானது என்றால், கடாரத்தில் சிதைந்த நிலையில் அமைந்திருக்கும் புஜங்க பள்ளத்தாக்கு ஆகும். எனினும், இன்னமும் செயல்பட்டு வரும் பழைமையான கோவில் என்றால், அது மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘ ஸ்ரீ பொய்யாத மூர்த்தி ஆலயம்’ ஆகும்.

பண்டைய காலத்தில், மலாக்கா மாநிலத்தில் அதிகமான நெல்லிமரங்கள் காணப்பட்ட்து. சமஸ்கிருதமொழியில் ‘அம்லா’ என்றால் நெல்லியைக் குறிக்கும். மலாக்காவை ஆண்ட ‘பரமேஸ்வரா’ எனும் இந்து அரசர் அதற்கு ‘அம்லாக்கா’ எனும் பெயரை இட்டார். அதுவே நாளடைவில், மலாக்கா எனும் பெயராக மருவியது.

18ஆம் நூற்றாண்டில், மலாக்கா மாநிலத்தை டச்சுக்காரர்கள் (நெதர்லாந்து) ஆண்டனர். அக்காலக்கட்டத்தில், இந்த கோவிலை தவிநாயகர் எனும் தமிழர் கட்டினார். இந்தக் கோவிலை ஸ்ரீவிநாயகப் பெருமானுக்காக கட்டினார். இக்கோவிலில் முருகப்பெருமானின் சன்னதியும் உண்டு.

இந்தக் கோவிலில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னி பொங்கல், தீபாவளி, மார்கழித் திங்கள், ஆயுதபூஜை, சிவராத்திரி, ஏகாதசி, அம்மன் திருவிழா, தைப்பூசம், மாசிமகம், தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை திருவிழா, பங்குனி உத்திரம், ஆடி திருவிழா, விநாயகர் சதுர்த்தி மேலும் இதர இந்து விழாக்களும் விசேஷமானவை.

இக்கோவிலின் தேர்கள் 200 ஆண்டுகள் பழைமையானவை. மரக்கட்டையால் உருவாக்கப்பட்ட இத்தேர்கள், மிக எழிலான சிற்பங்களோடு காட்சியளிக்கும். திருவிழாக் காலங்களில் இறைவன் தேர்களில் வண்ண விளக்குகளோடு ஊர்வலம் வரும் காட்சி எல்லோர் மனதையும் பக்தி மழையில் நனையச்செய்யும்.

No comments:

Post a Comment