Followers

Saturday 6 February 2016

இந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)



இந்து தர்மத்தை அறிவோம்


4.2) இந்து தர்ம நூல்கள் (ஸ்மிரிதி நூல்கள்)


ஸ்மிரிதி வகை நூல்கள் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்டவை. ஸ்மிரிதி வகை நூல்கள் இந்துதர்மத்தின் இரண்டாம் நிலை அடிப்படை நூல்கள். ஸ்மிரிதிகள் ஸ்ருதி வகை நூல்களுக்கு முரணாக இருக்க கூடாது. நான்கு வேதங்களையும் (அவற்றின் உள்ளடக்கங்களை) தவிர மற்ற இந்துதர்ம நூல்கள் யாவும் ஸ்மிரிதி வகையைச் சேர்ந்தவையே. உதாரணமாக உபவேதங்கள், வேதாங்கங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆறுதரிசனங்கள், தர்மசாஸ்திரங்கள் மற்றும் பல.


|| உபவேதங்கள் என்பவை:


உபவேதம் என்றால் செயல்முறை அறிவு எனப் பொருள்படும். உபவேதங்கள் நான்கு.
1) தனுர்வேதம் (போர் மற்றும் தற்காப்புக் கலை அறிவியல்)
2) ஆயுர்வேதம் (மருத்துவ அறிவியல்)
3) காந்தர்வ வேதம் (கலை அறிவியல்)
4) ஸ்தபத்ய வேதம் (கட்டடம் மற்றும் சிற்ப அறிவியல்)


|| வேதாங்கம் என்பவை:


வேதங்களின் அங்கம் (உறுப்பு) எனப் பொருள்படும். வேதங்களை எளிதாகக் கற்பதற்காக இவை அமைக்கப்பட்டன. வேதாங்கங்கள் ஆறு.
1) ஷிக்‌ஷா (ஒலியியல், சந்தி)
2) கல்பம் (சடங்குகள்)
3) வியாகரணம் (இலக்கணம்)
4) நிருக்தம் (சொல்லிலக்கணம்)
5) சந்தம் (சந்த அளவு)
6) ஜோதிஷம் (கால அளவு; சூரியன், சந்திரன், கிரகங்கள் நகர்வுகள்; வானவியல்)


|| இதிகாசங்கள் என்பவை:


இதிகாசம் என்றால் வரலாற்று நிகழ்வு எனப் பொருள்படும். இதிகாசங்கள் இரண்டு.
1) வால்மிகியின் இராமாயணம்
2) வியாசரின் மகாபாரதம்


|| புராணங்கள் என்பவை:


புராணம் என்றால் பண்டையது; பழையது எனப் பொருள்படும். 18 மகாபுராணங்களும் (பிரபலமானவை) 18 உபபுராணங்களும் (குறைந்த பிரபலமானவை) உள்ளன. இவற்றைத் தவிர்த்து சிவதல வரலாற்றைக் கூறும் 275 ஸ்தல புராணங்களும் உள்ளன.

மகாபுராணங்கள்
1) அக்கினி புராணம் – 15,400 சுலோகங்கள்
2) பாகவத புராணம் – 18,000 சுலோகங்கள்
3) பிரம்ம புராணம் – 10,000 சுலோகங்கள்
4) பிரம்மாண்ட புராணம் – 12,000 சுலோகங்கள்
5) பிரம்மவைவர்த்த புராணம் – 17,000 சுலோகங்கள்
6) கருட புராணம் – 19,000 சுலோகங்கள்
7) கூர்ம புராணம் – 17,000 சுலோகங்கள்
8) லிங்க புராணம் – 11,000 சுலோகங்கள்
9) மார்கண்டேய புராணம் – 9,000 சுலோகங்கள்
10) மட்ச புராணம் – 14,000 சுலோகங்கள்
11) நாரத புராணம் – 25,000 சுலோகங்கள்
12) பத்ம புராணம் – 55,000 சுலோகங்கள்
13) சிவ புராணம் – 24,000 சுலோகங்கள்
14) ஸ்கந்த புராணம் – 81,100 சுலோகங்கள்
15) வாமண புராணம் – 10,000 சுலோகங்கள்
16) வராக புராணம் - 24,000 சுலோகங்கள்
17) வாயு புராணம் – 24,000 சுலோகங்கள்
18) விஷ்ணு புராணம் - 23,000 சுலோகங்கள்


|| ஆறு தரிசனங்கள் என்பவை:


ஆறு தரிசனங்கள் என்றால் ஆறு பார்வைகள் எனப் பொருள்படும். இவை வேதகாலத்தைச் சேர்ந்த ஆறுவகை தத்துவங்கள். இவை: சாங்கியம், யோகம், மிமாம்சம், நியாயம், வைஷேஷிகம் மற்றும் வேதாந்தம் ஆகும். இவற்றுள் தற்போது நிலைத்திருப்பது வேதாந்தமும் யோகமும் தான்.

வேதத்தின் இறுதிபகுதியான ஞானகாண்டத்தை (உபநிடதங்கள்) அடிப்படையாகக் கொண்டது வேதாந்தம். முக்கிய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவை வேதாந்தத்தின் அடிப்படை நூல்கள்.

யோகம் என்பது மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்று நிலையிலும் அமைந்திருக்கும் நுட்பமான கல்வி முறையாகும். இதன் அடிப்படை நூலாக பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம் அமைந்துள்ளது.


|| தர்ம சாஸ்திரங்கள் என்பவை:


தர்ம சாஸ்திரம் என்றால் அறநெறி நூல் எனப் பொருள்படும். தர்ம சாஸ்திரங்களை இரண்டாகப் பிரிக்கலாம். அவை: தர்மசூத்திரம் மற்றும் ஸ்மிரிதி.

தர்மசூத்திரங்கள் நான்கு. அவை: அபஸ்தம்பர் சூத்திரம், கௌதமர் சூத்திரம், பௌதாயன சூத்திரம், வாசிஷ்டர் சூத்திரம்.

ஸ்மிரிதிகள் தர்மசூத்திரங்களுக்குப் பிறகு எழுதப்பட்டவை. அவை: யாக்ஞவல்கயர் ஸ்மிரிதி, நாரதர் ஸ்மிரிதி, விஷ்ணு ஸ்மிரிதி, பிரகஸ்பதி ஸ்மிரிதி, காத்யாயன ஸ்மிரிதி.

No comments:

Post a Comment