Followers

Saturday 6 February 2016

காஞ்சி கைலாசநாதர் கோவில்


காஞ்சி கைலாசநாதர் கோவில்


காஞ்சி கைலாசநாதர் கோவில் தோற்றம்


ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோவில் 7 ஆம் நூற்றாண்டை (685 AD) சேர்ந்ததாகும். ஏறக்குறைய 1330 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த பெருமைமிக்க ஆலயம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில் இதுதான்.










பல்லவர்கள் குடவரை கோயில்கள் வடிவத்திலிருந்து மாறி புதியவடிவத்தை கண்டுபிடித்தனர். அதுதான் மணற்கற்கல் (sand stone). இந்த கோயில் முழுவதும் மணற்கற்களால் மட்டுமே கட்டப்பட்டதுள்ளது.






இந்த கோயிலை பார்த்தப்பிறகுதான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் நான்கு வகையான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன:

1. நாகரி எழுத்து
2. கிரந்தம் எழுத்து
3. நன்கு அலங்கரிக்கப்பட்ட கிரந்தம் எழுத்து
4. பூ வேலைப்பாடு கொண்ட கிரந்தம் எழுத்து














இக்கோவிலின் எங்கு பார்த்தாலும் பிரமிப்பு. வாழ்க்கையில் ஒருமுறையேனும் ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில் வந்துபாருங்கள்.

1 comment: