Followers

Friday 12 February 2016

தாய்லாந்து அரசு சின்னம் கருடன்



தாய்லாந்து மொழியில், ‘பிராக்ருத்பஹ’ என்றால் கருட வாகனம் எனப் பொருள்படும். கருட சின்னம் தாய்லாந்து அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 1911-ஆம் ஆண்டு, வஜ்ராவுத் எனும் அரசரால் கருடச் சின்னம் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், தாய்லாந்து அரசு சின்னமாக இதர மூன்று சின்னங்களும் இருந்து வருகின்றன. அவை மஹா ஓங்க்கான் (சிவ முத்திரை), ஐராபொத் (ஐராவத முத்திரை), ஹங்ஸாபிமன் (பிரஹ்மாவின் அன்னமுத்திரை). தாய்லாந்தில் சிவனை பிரா ஈசுவான் என்றும், விஷ்ணுவை பிரா நாரா என்றும், பிரம்மாவை பிராபரம் என்றும் அழைப்பர். தாய்லாந்தின் அரசு, தாய்லாந்தின் பூர்வீக கலாச்சாரங்களையும் பழக்கவழக்கஙளையும் நன்முறையில் பேணிக் காத்துவருகின்றது.

No comments:

Post a Comment