Followers

Tuesday 2 February 2016

நம்மை தூய்மைப்படுத்த 10 வழிகள்




நம்மை தூய்மைப்படுத்த 10 வழிகள்


1. உடல் தூய்மை

-நம்முடைய உடலைத் தூய்மைப்படுத்த மூன்று வழிகள் உள்ளன. முதல் நிலை நீரால், இரண்டாவது நிலை ஆரோக்கியமான உணவு, மூன்றாவது நிலை போதிய உடற்பயிற்சி. நீர் நம்முடைய புற அழுக்குகளை நீக்கும். ஆரோக்கியமான உணவுகளால் நம் உள்ளுறுப்புகள் சுத்தமடையும். உடற்பயிற்சி நம்முடைய உடலை உறுதியாக்கி நலமாக வைத்துக் கொள்ள உதவும்.


2.
சுவாச தூய்மை
-
பிராணாயம் செய்ல். பிராணாயமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி செய்வதால், சுவாசம் சீராக இருக்கும். இதன்மூலம் நமக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படாது தவிர்க்கலாம்.

3.
மனத் தூய்மை
-
தியானம் செய்ல். தியானங்களில் ஈடுபடுவதால், நம்முடைய மனம் தெளிவான ஒரு நிலையை அடைகின்றது. இதனால் நம்முடைய மனத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தூய்மைபெறும்.

4.
அறிவுத் தூய்மை
-
ஞானம். நாம் இவ்வுலகிற்கு வந்ததே நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்ளதான். நிறைய நல்ல விஷயங்களை கேட்பதாலும் படிப்பதாலும் நாம் ஞானத்தைப் பெறுகிறோம். இதனால் நம்முடைய அறிவு மூடத்தனங்களில் இருந்து விடுபட்டு தூய்மை அடைகின்றது.

5.
நினைவாற்றல் தூய்மை
-
ல்ல சிந்தனை. நாம் எப்போதும் பிறர் நமக்கு செய்த தீமைகளை மறந்து விடவேண்டும். அதுவே மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை என்றுமே மறவக் கூடாது. இதுவே நம்முடைய நினைவாற்றலை தூய்மைப்படுத்த இயலும்.

6.
செயல் தூய்மை
-
தன்நலமற்ற சேவை. நம்முடைய எண்ணங்கள் எப்போதுமே நம் செயல்களாக உருவெடுக்கின்றன. நாம் செய்யும் செயல்கள் எல்லாம் இறைவனுக்கு செய்வதைப் போலவே எண்ணி செய்யவேண்டும். எதையும் பாரமாகவோ விருப்பமில்லாமலோ செய்ய கூடாது. தன்நலம் கருதாது, எல்லாவுயிர்களும் பயன்பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு நம் செயல்களை செய்வதே தூய்மை.

7.
ஆத்ம தூய்மை
-
மௌனம் (அமைதியான குணம்). எப்போதும் கோபப் படக்கூடாது. அதேவேளை, அதிக ஆர்ப்பாட்டமும் செய்ய கூடாது. துன்பமாக இருந்தாலும், பேரின்பமாக இருந்தாலும் ஒரே நிலையான அமைதியைக் கடைப்பிடிக்கவேண்டும். இதுவே தூய்மையான ஆத்மாவை உறுதிச்செய்யும்.

8.
உணவு தூய்மை
-
சமைக்கும் போதும் உண்ணும் போதும் எப்போதும் நல்ல எண்ணங்கள் கொண்டிருக்க வேண்டும். அதிகமான இனிப்பு, காரம், உப்பு என்று இல்லாமல் எதிலும் அளவோடு சேர்க்கவேண்டும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை மிகுதியாக உண்ணவேண்டும். இதுவே நாம் உண்ணும் உணவுகளின் தூய்மையை உறுதிச்செய்யும்.

9. பொருள்
 தூய்மை
-
தானம். நம்மிடம் பொருட்செல்வம் கொட்டி கிடந்தாலும், அல்லது ஏழையாக இருந்தாலும் எப்போதும் மற்றவர்க்கு கொடுத்து உதவுவதை நாம் விரும்பவேண்டும். ஒருவருக்கு நல்ல புத்திகளைச் சொல்வது கூட தானம் என்றே சொல்லப்படுகின்றது. செல்வம் உடையவர்கள் தங்களால் முடிந்தவரை ஏழை எளிய குழந்தைகளுக்கு தேவையானவற்றை அளித்து உதவலாம். இதுவே நம்மிடம் உள்ள செல்வங்களின் தூய்மையை நிலைப்படுத்தும்.

10.
உள்ளுணர்வு தூய்மை
-
அன்பு. நம்முடைய உள்ளுணர்வுகள் அன்பால் தூய்மை அடைகின்றன. எப்போதும் எல்லா உயிர்களிடமும் நாம் அன்பாக இருக்கவேண்டும். யாரையும் வெறுக்க கூடாது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதங்கள் இல்லாமல் எல்லோரையும் சரி சமமாக நேசித்தலே உள்ளுணர்வை தூய்மைப்படுத்தும்.

இந்த தூய்மையான நிலைகளை கடைப்பிடிப்பவர் தன்னுள்ளே குடியிருக்கும் பரம்பொருளான ஈஸ்வரனை உணர்கிறார்.

No comments:

Post a Comment